Dec
05
ஜா-எல பிரதேசத்தில் இளைஞர்-யுவதிகளின் களியாட்டம் சிக்கியது: வெளியாகிய தகவல்கள் இதோ...
ஜா-எல பிரதேசத்தில் இடம்பெற்ற இளைஞர்களின் களியாட்ட நிகழ்வொன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
மேலும் வாசிக்க
23,983 Views
Apr
29
கட்சியினுள் முன்னெடுக்கப்பட்ட கிளர்ச்சி தொடர்பில் சோமவன்ச
ஜே.வி.பியிலிருந்து விலகிய அதன் முன்னாள் தலைவர் சோமவங்ச அமரசிங்க தாம் கட்சியினுள் முன்னெடுத்த கிளர்ச்சி தொடர்பாக நேற்று ஊடக அறிக்கை மூலம் கருத்து தெரிவித்திருந்தார்.
மேலும் வாசிக்க
1,622 Views
Jun
03
இப்படியும் ஒரு விருந்தா?
பெல்ஜியம் நாட்டில் அறுசுவை விருந்தொன்று வாடிக்கையாளர்களுக்கு பரிமாறப்பட்டுள்ளது.
இதிலென்ன விசேஷம்னு நீங்க நினைக்கலாம்.இந்த விருந்து பரிமாறப்பட்ட இடம் தான் விஷேஷம்.
'குடை ராட்டினம்' போன்ற வட்ட வடிவான சாப்பிடும் அறை தயாரிக்கப்பட்டு அந்நகரிலுள்ள உயர்ந்த கட்டிடத்தின் மேலிருந்து க்ரேன்களின் உதவியால் நடுவானில் நிலை நிறுத்தப்பட்டது.
பிரபல சமையற் கலை நிபுணர் ஒருவர் இங்கிருந்து விதம்விதமான உணவுகளை சமைத்து சுடச்சுட பரிமாற வாடிக்கையாளர்களும் தாம் இருப்பது பூலோகமா மேலோகமா என்று தெரியாமலே அந்நகரின் முழு அழகையும் ரசித்தபடி உணவருந்தியுள்ளனர். இங்கிருந்த அனைவரும் இழுத்து கட்டப்பட்ட பாதுகாப்பு பட்டிகளுடன் அமர்ந்திருந்தமை குறிப்படதக்க ஒரு விடயம்.
மேலும் வாசிக்க
939 Views
Apr
18
சமூக வலைத்தள கணக்கை நீக்கிய யுவன்.
இளையதளபதி விஜய் மற்றும் இயக்குநர் வெங்கட் பிரபு ஆகியோர் முதன்முறையாக 'GOAT' திரைப்படம் மூலம் கூட்டணி அமைத்திருக்கின்றனர். விஜய்யின் 68 ஆவது திரைப்படமான இத்திரைப்படத்தில் ஜெயராம், பிரபு தேவா, மோகன், பிரஷாந்த், வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்டோர் நடிக்கின்றார்கள்.
மேலும் வாசிக்க
697 Views
Jul
26
சூரியன் 16 - சூரியனின் பிறந்தநாள் கொண்டாட்டம்
சூரியனின் 16வது பிறந்ததின கோலாகல கொண்டாட்டங்கள் இன்று காலை சூரியனின் அலுவலகத்தில் ஆரம்பித்தது. சமய வழிபாடுகளோடு தொடங்கிய நிகழ்வில், ஆசிய ஊடக வலையமைப்பின் தலைவர் திரு.ரெய்னோர் சில்வா தலைமை தாங்கி நிகழ்வுகளை அலங்கரித்தார்.
அவரோடு அரவிந்த லொக்குகே, தம்மிக பண்டார தென்னக்கோன், சூரியனின் பணிப்பாளர் ஏ.ஆர்.வி.லோஷன் மற்றும் ஏனைய உயரதிகாரிகளும் மாத்திரமில்லாமல், சூரியனின் பிரம்மாண்டமான பிறந்தநாள் பரிசு மெகா ப்ளாஷ்டில் கலந்துகொள்ள வந்திருக்கும் தென்னிந்திய பின்னணி பாடகர்களான எம்.கே.பாலாஜி, சர்மிளா, பிரபு ஆகியோரும் சூரியக் குடும்பத்தினரோடு கலந்து சிறப்பித்தார்கள்.
மதியப் பொழுதில் சூரியனோடு இணைந்திருக்கும் நேய சொந்தங்களுக்காக, உள்ளக கலையகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட சரிகம கருணாவின் இசைநிகழ்ச்சி காற்றலையில் நேரலையாக கலந்து இன்னும் பிரமிப்பை அதிகமாக்கியது.
அலங்கரிக்கப்பட்ட அலுவலகம், அன்போடு நிறைந்த நேயர் கூட்டம், மகிழ்ச்சித் திளைப்பின் உச்சியில் முதல்தர வானொலி சூரியன் தனது 16வது அகவை நிறைவை இன்று அலுவலகத்தில் கொண்டாடியது ஒரு சிறப்பெனில், இன்னொரு அசத்தலான சிறப்பு நாளையும் நிகழவுள்ளது.
நம் பாரம்பரியம் பேசும் யாழ் மண்ணில்
மெகா ப்ளாஸ்ட் எனும் நாமத்தோடு - அதிரடி இசை பிரவாகம்
Sooriyan FM 16th Anniversary Celebration - Office Party
மேலும் வாசிக்க
479 Views
Aug
30
ஸ்பெயின் தக்காளி திருவிழா - ஒரு கோலாகலக் கொண்டாட்டம்.
ஸ்பெயினில் நடந்த தக்காளி திருவிழாவில், 1.25 லட்சம் கிலோ தக்காளி கூழாக்கப்பட்டது.
இது ஒவ்வொரு ஆண்டிலும் ஸ்பெய்னில் மிகக் கோலாகலமாகக் கொண்டாடப்படும் ஒரு திருவிழாவாகும்.
கடந்த 1945ல், தக்காளித் திருவிழா, ஸ்பெயின் நாட்டின், புணால் நகரில் துவங்கியது.
ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்த திருவிழா, கடந்த புதன்கிழமை நடந்தது.இதில், 40 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். குவித்து வைக்கப்பட்டிருந்த, 1.25 லட்சம் கிலோதக்காளிகளை எடுத்து, ஒருவர் மீது ஒருவர் எறிந்து விழாவை கொண்டாடினர்.
ஸ்பெயினில் நடக்கும், இந்த விழாவைக் காண, உலகம் முழுவதிலும் இருந்து, ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள், புணால் நகருக்கு படையெடுத்து வருகை தந்திருந்தனர்.
மேலும் வாசிக்க
937 Views
Sep
24
விஜய்க்கு மீண்டும் வலை வீசும் த்ரிஷா
த்ரிஷாவுக்கு கல்யாணம் இன்று நாளை .. என்று, நாட்கள்தான் நீள்கிறதே தவிர, எதுவும் நடந்தபாடில்லை. ஆனாலும், எங்கு என்ன நடந்து ஓய்ந்தாலும் அம்மணி நடிப்பில் முழுக்கவனத்தோடு இருக்கிறார். அத்தோடு, த்ரிஷா எங்கு சென்றாலும் அவரோடு கூடவே, நடிகர் ராணாவும் காணப்படுகிறார். கேட்டால், அவர் என் ''நண்பர்'' அவ்வளவுதான் அம்மணி உதிர்க்கும் பதில்.
இருவருக்கும் இடையில் ஒரு இது இருக்கு என, உலகமே பேசிகொண்டாலும், உறுதிப்படுத்த முடியாமல் பேச்சோடு நிற்கிறது அந்த பிரச்சினை.
சரி! நாங்க சொல்ல வந்த விசயத்துக்கு வருவோம்!
முக்கியமான பெரிய நடிகர்களின் படங்களை தன்வசப் படுத்துவதில் கைதேர்ந்தவர் த்ரிஷா. பல தடவைகள் உறுதி செய்துமிருக்கிறார்.
அஜித்தின், ஜீ,கிரீடம்,மங்காத்தா என வரிசையாக 3 படங்களையும் கைப்பற்றி தானே நாயகியாக மாறிய அம்மணி, அதன் பிறகு கௌதம் மேனனின் புதிய தல 55இலும் அஜித் ஜோடியாகி விட்டார்.
இது மட்டுமா? விஜய்யோடு கில்லி, திருப்பாச்சி, ஆதி, குருவி என ஜோடியாகியவர் இப்பொழுது விஜயுடன் அடுத்த படத்தில் எப்படியும் தானே நடித்து விட வேண்டும் என தீவிரமாக இயங்கி வருவதாக தெரிகிறது.
அண்மையில் வெளியான கத்தி படத்தின் பாடல்கள் பற்றியும் இசையின் மகிமை பற்றியும் அனிருத்துக்கு வாழ்த்துக் கூறி தன் இணையப் பக்கத்தில் செய்தி பிரசுரித்திருக்கிறார் த்ரிஷா. எனவே, இந்த முயற்சி, விஜய்யின் அடுத்த படத்தைக் கைப்பற்றும் ஒரு வலை விரிப்பு தான் என்கிறார்கள் தகவலறிந்தவர்கள்.
-அம்மணி (மீண்டும்) புளைச்சுக் கொள்ளும்-
Trisha´s Birthday Party
மேலும் வாசிக்க
634 Views
Feb
24
காஞ்சனா 2 ஆனது -முனி 3
ஆரம்பத்தில் ராகவா லோரன்ஸ், ராஜ்கிரண், வேதிகா நடிப்பில் வந்து அனைவரையும் திகிலடைய வைத்து நல்ல பெயர் வாங்கிய படம் முனி. லோரன்ஸ் தானே இயக்கியிருந்தார்.
அதன் பின்னர், லோரன்ஸ், லட்சுமிராய், கோவை சரளா, தேவதர்ஷினி, சரத்குமார் என நட்சத்திரங்கள் போட்டி போட்டு நடித்து, சிரிக்கவும் சொல்லி சிந்திக்கவும் கற்றுக் கொடுத்த படம் காஞ்சனா. அதாவது, முனி 2 !
பின்னர், இந்த அத்தனை படங்களும் கொடுத்த வெற்றியின் நிமித்தம் லோரன்ஸ் உற்சாகமாக அடுத்த படத்தையும் ஆரம்பித்தார். பேய், மர்மம், நகைச்சுவை என்று இவரது படைப்பின் பாணி புதிதாய் இரசிகர்களுக்கு விருந்து சமைத்தது. ஆர்ப்பாட்டமில்லாத நடிப்பும், ஆழமான கதை ஓட்டமும் பல விதத்தில் படத்தைப் பற்றி பேச வைத்தது.
இதன் காரணமாக, லோரன்ஸ் நாயகனாகவும், வெள்ளாவிப் பொண்ணு டாப்ஷி நாயகியாகவும் இன்னும் பல நட்சத்திரங்களோடு முனி 03 என்று படத்தை இயக்க ஆரம்பித்தார். பின்னர் கங்கா என பெயரிட்டுப் பார்த்தார். நாமும் அதே பெயரையே பதித்துக் கொண்டோம். ஆனாலும், அதுதான் இல்லை என்கிற வகையில் இப்பொழுது முனி 3, காஞ்சனா 2ஆக மாறியுள்ளது. காஞ்சனாவின் வெற்றி கொடுத்த மகிழ்ச்சியால் இதற்கும் அதே பெயரை இட்டுள்ளதாக லோரன்ஸ் சொல்கிறார்.
இப்படம், கோடை விருந்துக்கு வருகின்ற படங்களில் ஒன்றாக இணையவுள்ளது.
-கொண்டு வந்தது கோடம்பாக்கக் குருவி-
மேலும் வாசிக்க
463 Views
Mar
12
பாகம் இரண்டாகிறது என் ராசாவின் மனசிலே
அனைவரையும் கவர்ந்த திரைப்படமாகவும், வெற்றித் திரைப்படங்களில் ஒன்றாகவும் 1991இல் வெளிவந்த படம் என் ராசாவின் மனசிலே! ராஜ்கிரண் மற்றும் மீனா, வடிவேலு, பிரீத்தா போன்ற நட்சத்திரங்கள் நடித்திருக்க, இயக்குனர் கஸ்தூரி ராஜா இயக்கியிருந்தார்.
ராஜ்கிரண் அறிமுகமானதுடன், தமிழ் சினிமாவின் நகைச்சவை மன்னன்களில் ஒருவர் வைகைப்புயல் வடிவேலுவும் களமிறங்கிய படம் இது.
சரி, இதை ஏன்இப்போ சொல்றன்னு நீங்க யோசிக்கலாம். இங்கதான் இருக்கு விஷயம். இந்த என் ராசாவின் மனசிலே திரைப்படம், இபொழுது மீளவும் பாகம் 2ஆக தயார் செய்யப்படவுள்ளது. வெள்ளி விழாப் படமான இப்படத்தை, 24 வருடங்களுக்கு பிறகாக, இப்பொழுது மீண்டும் எடுக்க ஆயத்தமாகி வருகிறார்கள்.
இதிலும், நாயகனாக ராஜ்கிரணும் ஜோடியாக மீனாவும் நடிக்கவே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இளையராஜா இசையமைக்கவுள்ள இப்படத்துக்கு இப்பொழுதே இரசிகர்கள் மத்தியில் கிராக்கி கூடியிருக்கிறது.
-கொண்டு வந்தது கோடம்பாக்கக் குருவி-
மேலும் வாசிக்க
185 Views
Mar
16
பார்வதி ஓமனக்குட்டன் உடல் உறுப்புக்கள் தானம்
தல அஜித் ஜோடியாக பில்லா 2 இல் இறக்குமதியானது, இந்த புன்னகை பூகம்பம் பார்வதி ஓமனக்குட்டன். அழகான ஒல்லிப்பிச்சான் நடிகையாக கோடம்பாக்கத்துக்குள் வந்த அம்மணிக்கு வேறு படங்கள் கை கொடுக்கவில்லை. வாய்ப்பும் வரவில்லை.
ஆனாலும், இந்த அழகி 2008இல் மிஸ் இந்தியா பட்டம் பெற்றவர் என்பதும் முக்கியமானது. அஜீத்துக்காக தமிழுக்கு வந்தாலும், அம்மணி ஏற்கனவே ஹிந்திப் படங்களில்படு பிசியான நடிகை. பல படங்களில் நடித்தும் வருகிறார்.
இந்நிலையில், பார்வதிக்கு இப்பொழுது சமூக சேவை சார்ந்த அம்சங்களில் ஆர்வம் அதிகரித்துள்ளது. சிறுவர் இல்லங்கள், முதியோர் இல்லங்கள் மற்றும் ஏனைய பொதுநலன் சார்ந்த அமைப்புகளுக்கும் அடிக்கடி விஜயம் செய்து வருகிறார். இவை அனைத்துக்கும் மேலாக தனது உடல் உறுப்புக்களில் அடுத்தவர்களுக்கு பயன்படும் உறுப்புக்களை தானம் செய்துள்ளார்.
தன்னால் முடிந்த சின்ன உதவி இது என பெருமையாக பேசி வருகிறார் பார்வதி ஓமனக்குட்டன்.
-கொண்டு வந்தது கோடம்பாக்கக் குருவி-
மேலும் வாசிக்க
129 Views
Mar
25
தேசிய விருதுகள் குறித்து இயக்குனர் பார்த்தீபன் ஆதங்கம்!
62 வது தேசிய விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில், திறமையும் தகுதியும் உள்ளவர்கள் பெரும்பாலனவர்களுக்கு விருதுகள் கிடைப்பது இல்லை சிலருக்கு மட்டுமே அந்த பொன்னான வாய்ப்பு சென்றடைகின்றது என்று இயக்குனர் பார்த்தீபன் தன் ஆதங்கத்தை கொட்டித்தீர்த்து இருக்கிறார்
62-வது தேசிய விருதுகள் பட்டியல் டெல்லியில் அறிவிக்கப்பட்டது. இப்பட்டியலில் தமிழில் சிறந்த படமாக 'குற்றம் கடிதல்'இ சிறந்த உறுதுணை நடிகராக 'பாபி சிம்ஹா'இ சிறந்த குழந்தைகள் படமாக 'காக்கா முட்டை' என தமிழ்ப் படங்களுக்கு 7 விருதுகள் கிடைத்திருக்கிறது.
தேசிய விருது தேர்வுக்காக பார்த்தீபன் இயக்கி வெளிவந்த “கதை திரைக்கதை வசனம்” அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் அந்தப்படத்துக்கு எந்தவொரு விருதும் கிடைக்கவில்லை. ஆறுதலுக்கு கூட ஒரு விருது கூட கிடைக்காமல் போனது துரதிஸ்டமே.
இந்த மன உடைவின் காரணமாக தன்னுடைய ஆதங்கத்தை பேஸ்புக் பக்கத்தில் வெளிப்படுத்தியுள்ளார்.
'The wolf of wall street'படத்தில் லியானார்டோ டி காப்ரியோ-வுக்கு ஆஸ்கார் கிடைக்குமென நாடே காத்திருக்க டி காப்ரியோ 10 வருடங்களாக அதற்காக வித்தியாசமான வேடங்களில் பின்னிஃமின்னி ஆவலோடு காத்திருக்கிறார்.
திறமையும் தேடலும் உள்ள அனைவருக்கும் விருது கிடைப்பதில்லை ஒரு சிலருக்கு மாத்திரமே விருது கிடைக்கின்றது
எனக்கும் 'மேல்விலாசம்' என்ற மலையாளப்படம் 'ஆயிரத்தில் ஒருவன்' படங்களில் சிறந்த நடிப்புக்கும் ’கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ சிறந்த இயக்குநர் திரைக்கதை இப்படி சில விருதுகள் கிடைத்திருக்கலாமென பாராட்டி மக்கள் 'பேசிய விருது' தேசிய விருதுக்கு ஒப்பானது.
இருப்பினும் தொடரும் உங்கள் ஆதரவோடு தொடர்கிறேன் என் வித்தியாச முயற்சிகளை. நன்றி" என்று பார்த்திபன் தெரிவித்திருக்கிறார்.
====== CASTRO RAHUL ======
மேலும் வாசிக்க
109 Views
May
15
வடிவேலு தேடும் பெரிய ஹீரோயின்
மூன்று வருட இடைவெளிக்கு பிறகு வைகைப்புயல் நடித்த திரைப்படம் தெனாலிராமன் , பெருத்த லாபத்தை கொடுக்காவிடினும், விநியோகிஸ்தர்களுக்கு நஷ்டத்தை கொடுக்கவில்லை. அதனால் வடிவேலு புதுத்தெம்புடன் அடுத்த படத்திற்கான ஏற்பாடுகளை கவனிக்க தொடங்கியுள்ளார்.
இந்த முறை வடிவேலு தானே தன்னுடைய படத்தை தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி தனக்கு ஜோடியாக நடிக்க பிரபல நடிகையிடம் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும், அவர்களின் பெயரை வைத்தே படத்தை ஒட்டி விடலாமெனவும் முடிவெடுத்துள்ளதாகவும் கிசுகிசுக்கப்படுகிறது.
தெனாலிராமன் படத்தில் வேறு பிரபல ஹீரோயினை நடிக்க வைத்திருந்தால் இன்னும் நன்றாக கலெக்சன் கூடியிருக்கும் என்று கூறப்பட்டதால், தன்னுடைய அடுத்த படத்தில் பிரபல ஹீரோயினியை தேடி வருகிறார் வடிவேலு.
அவருடைய லிஸ்ட்டில் த்ரிஷா, லட்சுமி ராய், ஸ்ரீதிவ்யா ஆகியோர்களின் பெயர்கள் உள்ளதாக வடிவேலுவின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவர்களில் யாராவது ஒருவர் தன்னுடன் நடிக்க ஒப்புக்கொண்டால், அவர்கள் கேட்கும் தொகையை சம்பளமாக கொடுத்துவிடலாம் என்ற முடிவில் இருக்கிறாராம் வைகைப்புயல்.
வடிவேலுவின் ஹீரோயின் வேட்டையால் கோலிவுட்டில் உள்ள பிரபல நடிகைகள் அதிர்ச்சியில் உள்ளதாக கூறப்படுகிறது. எங்கே தங்களிடம் வந்து வடிவேல் கேட்டுவிடுவாரோ அதுவே தங்கள் மார்க்கெட்டை இழக்கச் செய்துவிடுமோ என்பது தான் பயத்துக்குக் காரணமாம்.
இதற்குள் நடிகை சமந்தாவுக்கும் தூது விட்டுப் பார்க்கலாம் என்று யாரோ வடிவேலுக்கு கொளுத்திப் போட்டிருக்காங்களாம்.
ஹா ஹா ஹா சிக்கினாங்க அம்மணிகள்
மேலும் வாசிக்க
4,432 Views
May
13
ஜெ. விடுதலை..! வடிவேலு அதிர்ச்சி…! – எலி பட விழாவை ரத்து செய்தார்…!
ஆளும்கட்சிக்கு காவடி தூக்குவதை part time வேலையாகவே செய்து வருகின்றனர் – படத்துறையினர்.தமிழ்த்திரையுலக அமைப்புகளோ ஒருபடி மேலேபோய், அ.தி.மு.க. அமைச்சர்களை மிஞ்சம்வகையில் ‘அம்மா புராணம்’ பாடுவதையே முக்கிய கடமையாக செய்து வருகின்றன.
மேலும் வாசிக்க
6,032 Views
May
19
விஜய் சேதுபதிக்கு வில்லனாக பார்த்தீபன்
பார்த்திபன் தற்போது மீண்டும் பிஸி இயக்குனர் ஆகிவிட்டார், இருந்தாலும் மாஸ் படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரம் என்பதால் நடிக்க சம்மதித்துள்ளார்.
மேலும் வாசிக்க
2,976 Views
Jun
09
புதிய அரசியல் கட்சியொன்று வருகிறது
தகைவிலாங் குருவியை சின்னமாகவும் , குரக்கன் நிறத்தை கட்சியின் நிறமாகவும் கொண்டு புதிய அரசியல் கட்சியொன்றை பதிவு செய்யும்படி தேர்தல்கள் ஆணையாளரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் வாசிக்க
2,838 Views
Jun
18
ஆரம்பித்தது அரண்மனை பாகம் இரண்டு !!
சுந்தர் சி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான 'அரண்மனை' திரைப்படம் சூப்பர் ஹிட் ஆகி பிரமாண்டமான வசூலை கொடுத்தது என்பது அனைவரும் அறிந்ததே. சுந்தர் சி, வினய், ஹன்சிகா, ஆண்ட்ரியா, ராய்லட்சுமி, சந்தானம் மற்றும் பலர் நடித்திருந்த இந்த படம் சூப்பர் ஹிட் ஆனதை அடுத்து இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க சுந்தர் சி முடிவு செய்திருந்ததாக செய்திகள் வெளிவந்து அந்த படத்திற்கான நடிகர் நடிகைகளும் தேர்வு செய்யப்பட்டு வந்தனர்.
மேலும் வாசிக்க
3,349 Views
Jul
03
பாடசாலை மைதானத்தில் உடைந்து விழுந்த விமானத்தின் பாகம்
தலங்கம பிரதேசத்தில் உள்ள பாடசாலையொன்றின் விளையாட்டு மைதானத்திலிருந்து இலகு ரக (சீ-பிளேன்) விமானத்தின் பாகமொன்று மீட்கப்பட்டுள்ளது.
மேலும் வாசிக்க
2,814 Views
Jul
04
இவ்வருட குருபெயர்ச்சி பலாபலன்கள் Part 1
தமிழினதும் இந்து சமயத்து மக்களினதும் மிக முக்கியமான பலன் கணிப்புகளாக, குருபெயர்ச்சி பலன்கள் அனுமானிக்கப்பட்டு கேட்கப்பட்டு வருகிறது.
பொதுவாக ஜோதிடத்தைப் பொறுத்த வரையில், குருவும் சுக்கிரனும் சுப கிரகங்களாக கூறப்படுகிறார்கள். வசதி வாய்ப்புடன் வாழ்பவர்களை பார்த்து சுக்கிர திசைஅடிக்கிறது என்பார்கள். சுக்கிரன் தனி மனித செல்வத்திற்க்கு காரகர் குரு பொது செல்வத்திற்க்கு காரகர் எனவே குரு பெயர்ச்சி எல்லோராலும் எதிர்பார்க்கும் தன்மையுடையதாகிறது.
மேலும் வாசிக்க
49,406 Views
Jul
04
இவ்வருட குருபெயர்ச்சி பலாபலன்கள் Part 2
துலாம்:
வான மண்டலத்தில் ஏழாவது இராசியாக காணப்படுவது துலாம் இராசியாகும். இதில் அடங்கப் பெற்ற நட்சத்திரங்கள் சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி மற்றும் விசாகம் 1 , 2, 3, பாதங்கள் வரை ஆகும்.
இந்த நட்சத்திரங்களின் வரிசையில் பிறந்தவர்கள் துலாம் இராசியில் பிறந்தவர்கள் ஆவர்.
நகைச்சுவை பேச்சும், ஆடல், பாடல், சங்கீதம், மற்றும் விளையாட்டுத் துறையில் ஆர்வமும் நிறைந்த நியாயமான பேச்சால் அனைவரையும் கவரக்கூடிய துலாம் இராசி நேயர்களே வணக்கம்.
மேலும் வாசிக்க
54,969 Views
Aug
17
சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர்கள் 13 பேர் நீக்கப்பட்டனர்
ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுவிலிருந்து 13 உறுப்பினர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் வாசிக்க
2,801 Views
[1]«1|2|3»[4]